சந்நிதிக்கு போகும்வழியில் இருக்கும் பாலத்தின் அருகில் முருகுபிள்ளை நவரத்தினசாமியின் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை ,இந்தியாவைப்பிரிக்கும் 33~mile நீளமான பாக்கு நீரிணையை 1955 இல் கடந்து சாதனைபடைத்தவர் இவர்.
இவரைக்கடந்து சிலமீட்டர்கள் தூரத்தில்தான் சந்நிதியானின் தரிசனம் கிடைக்கிறது.சூரனுக்கு தூதுசென்ற வீரபாகுத்தேவரிடமிருந்து இந்தக்கோவிலின் வரலாறு ஆரம்பிக்கிறது, போத்துக்கேயர், ஒல்லாந்தரால் கோவில்கள் உடைக்கப்பட மீண்டும் கோயிலை நிர்மாணித்தவர் கதிர்காமர்,இவர் ஒரு மீனவர் ,"மறுகரைக்கு வா"என அசரீரி கேட்க இவரும் ஆச்சரியத்துடன் அங்கு செல்ல "எனக்கு இவ்விடம் கோவில் ஒன்றை கட்டுக" என முருகன் சிறுவன் வேடத்தில் காட்சிகொடுத்தானாம், "எனக்கு பூசைசெய்யதெரியாதே" என கதிர்காமர் கூற கதிர்காமத்துக்கு அழைத்துச்சென்று காண்பித்திருக்கிறார் முருகன் ,இதன்பின் இங்கும் கதிர்காமத்தைப்போல் வாய்கட்டியே பூசைகள் நடத்தப்படுகின்றன.
Post a Comment